டி.கண்ணன் - கவிதை

காட்சி

உச்சாணிக்கிளைக்குக் கீழ்க்கிளை
அமர்ந்த பறவை
‘தெரியும்’ ‘தெரியும்’
என்று அலறியது
வான் நோக்கி.
அணில்கள் தாவி மறைந்தன
‘அப்படியா’ எனக் கேட்டு
பறந்தமர்ந்தன அருகாமைப்
பறவைகள்
‘தெரிந்தால்தான் என்ன?’
என உச்சாணிக்கிளைப்
பறவையின் உச்சாடனம்.
மரம் முழுவதும் கிளைகள்
கிளைகள்தோறும் பறவைகள்.
‘தெரியுமே’ என்றது
கானகம்.